பூங்காவின் பின்னாலான உழைப்பைப் புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் நன்னோக்குடன் கருத்துக்கூறியவர்களுக்கும் நன்றி. பூங்கா தற்காலிகமாகத் தோன்றாதது பற்றி உடனடியே அறியத்தராததற்குப் பூங்கா ஆசிரியர் குழு தன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றது.
இரண்டாம் ஆண்டிலே, பூங்காவைப் புதிய தேர்வுமுறையிலும் , மெருகூட்டப்பட்ட அமைப்பிலும் கொண்டுவர விரும்புகிறோம். டிஎம்ஐ இன் தொழில்நுட்பக்குழு ஏற்கனவே இதற்கான பணிக ளிலே ஈடுபட்டிருக்கின்றது. இயலுமானவரை தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டுவந்துவிட முடியும் என்று எண்ணினோம். ஆனால், தமிழ்மணத்தின் புதிய சேவைகளுக்கும் தேவைகளுக்கும் பொருந்தும்வகையிலே தொழில்நுட்பத்திலே சில மேலதிக மாற்றங்களையும் செய்யவேண்டியிருக்கிறது .
விரைவிலே மீண்டும் பூங்காவினைப் புத்துயிர்ப்புடன் காணலாமென அறியத்தருகிறோம்.
தொடரும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
ஆசிரியர் குழு
தமிழ்மணம்
-பூங்கா








